கல்முனை சாஹிரா மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்!

Date:

(பொலிவேரியன் நிருபர் -எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் மாணவன் எம்.ரீ.எம்.அர்மாஸ், தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று, பாடசாலைக்கு நற்கீர்த்தியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

12 தொடக்கம் 18 வயதுப் பிரிவினருக்கான பேச்சுப் போட்டியில் தரம் 9ஆம் பிரிவைச் சேர்ந்த இம் மாணவன், பல முன்னணிப் பாடசாலைப் போட்டியாளர்களைப் பின்தள்ளி இச்சாதனையைப் புரிந்துள்ளார்.

வெற்றி பெற்ற இம் மாணவனுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு, வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கல்லூரியின் அதிபர் எம்.ஐ. ஜாபீர், பகுதித் தலைவர், வகுப்பாசிரியர் திருமதி எம்.ஆர்.எப். இஸ்ஸத் ஜஹான் ஆகியோருக்கு பாடசாலை கல்விச்சமூகம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...