கல்முனை சாஹிரா மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்!

Date:

(பொலிவேரியன் நிருபர் -எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் மாணவன் எம்.ரீ.எம்.அர்மாஸ், தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று, பாடசாலைக்கு நற்கீர்த்தியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

12 தொடக்கம் 18 வயதுப் பிரிவினருக்கான பேச்சுப் போட்டியில் தரம் 9ஆம் பிரிவைச் சேர்ந்த இம் மாணவன், பல முன்னணிப் பாடசாலைப் போட்டியாளர்களைப் பின்தள்ளி இச்சாதனையைப் புரிந்துள்ளார்.

வெற்றி பெற்ற இம் மாணவனுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு, வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கல்லூரியின் அதிபர் எம்.ஐ. ஜாபீர், பகுதித் தலைவர், வகுப்பாசிரியர் திருமதி எம்.ஆர்.எப். இஸ்ஸத் ஜஹான் ஆகியோருக்கு பாடசாலை கல்விச்சமூகம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Popular

More like this
Related

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...