கல்முனை சாஹிரா மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்!

Date:

(பொலிவேரியன் நிருபர் -எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் மாணவன் எம்.ரீ.எம்.அர்மாஸ், தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று, பாடசாலைக்கு நற்கீர்த்தியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

12 தொடக்கம் 18 வயதுப் பிரிவினருக்கான பேச்சுப் போட்டியில் தரம் 9ஆம் பிரிவைச் சேர்ந்த இம் மாணவன், பல முன்னணிப் பாடசாலைப் போட்டியாளர்களைப் பின்தள்ளி இச்சாதனையைப் புரிந்துள்ளார்.

வெற்றி பெற்ற இம் மாணவனுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு, வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கல்லூரியின் அதிபர் எம்.ஐ. ஜாபீர், பகுதித் தலைவர், வகுப்பாசிரியர் திருமதி எம்.ஆர்.எப். இஸ்ஸத் ஜஹான் ஆகியோருக்கு பாடசாலை கல்விச்சமூகம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...