சியாரா லியோனில் எண்ணெய் தாங்கி வெடித்து 92 பேர் பலி!

Date:

சியாரா லியோனில் எண்ணெய் தாங்கி வெடித்ததில் 92 பேர் உயிரிழந்துள்ளனர்.100 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஆபிரிக்க கண்டத்தில் உள்ள சியாரா லியோன் தலைநகரான ப்ரீடவுனில் எண்ணெய் தாங்கி ஒன்று மற்றொரு வாகனம் மீது மோதியதை தொடர்ந்து வெடித்தது.

இதில் 92 பேர் உயிரிழந்துள்ளதோடு 100 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசு உறுதி செய்யவில்லை.அதேநேரத்தில் 91 சடலங்கள் வந்துள்ளதாக பிணவறை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.எண்ணெய் தாங்கி மோதியதை தொடர்ந்து அதிலிருந்து கசிந்த எரிபொருளை சேகரிக்க மக்கள் கூடிய போது அப்போது எண்ணெய் தாங்கி வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தாங்கி வெடித்ததால் அருகில் இருந்த கடைகள் மற்றும் கட்டடங்களில் தீ பரவி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

காயமடைந்தவர்கள்அந் நகரில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...