தமிழர்களை விட இஸ்லாமியர்களே எங்களை அதிகம் ஆதரிக்கிறார்கள்- நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்!

Date:

தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் போது எங்களை ஆதரிப்பதனை விடவும் , முஸ்லிம்களின் பக்கத்திலிருந்து கிடைக்கின்ற ஆதரவு பெருமளவில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினருடனான சந்திப்பு நேற்று (24) டொராண்டோ நகரில் இடம்பெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் அனைத்து சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கின்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.சில இஸ்லாமிய அரசியல்வாதிகளிடம் ஒரு கருத்து இருக்கின்றது அதாவது, இவர் என்ன எங்களுடைய பிரச்சினைகளை கதைக்கின்றார் ,எங்களுக்காக பேசுகின்றார் என்கின்றனர்.எனினும் நான் அனைத்து பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுக்கின்றேன்.

அதிலும் முஸ்லிம் சகோதரர்கள் மத்தியில் அதி வரவேற்பு கிடைத்துள்ளது.தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் போது எங்களை ஆதரிப்பதனை விடவும் முஸ்லிம்களின் பக்கத்திலிருந்து கிடைக்கின்ற ஆதரவு பெரிதளவில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் குறிப்பிட்டார்.

எனக்கு முன்னர் உரையாற்றிய ஒருவர் சொன்னார் நாங்கள் அவர்களுக்கு வாக்களிப்போவதில்லையென அது உண்மை தான்.என்னை பொறுத்தவரையில் நான் அந்த வாக்குகளுக்காக எதனையும் செய்யவில்லை.கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் , இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படாவிடின் எதிர்காலத்தில் பேரினவாதிகளின் ஆதிக்கம் கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து விடும் என்றார்.

https://m.facebook.com/story.php?story_fbid=442090857284912&id=100044520053805

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...