குறிஞ்சாக்கேணி பாலம் விவகாரத்திற்கு தீர்வை பெற்றுக் கொடுக்காததால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டின் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று (23) காலை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 7பேர் மரணமடைந்ததுடன் குறித்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இந் நிலையில் படகு விபத்தின் பலி எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து கிண்ணியாவில் பதற்ற நிலைமை உருவானது.இதனை தொடர்ந்து அப் பகுதியில் அமைந்துள்ள முஸ்லீம் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தௌபீகின் வீட்டின் மீது பொதுமக்கள் ஆவேசத்துடன் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.குறித்த சம்பவத்தை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கடற்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.