நாட்டில் சிறுபான்மை என்று ஒரு இனம் இல்லை | ஞானசார தேரர்

Date:

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், சட்டத்திற்கான வேலைத்திட்டத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன்  இருப்பதாகவும், இன்று பல விமர்சகர்கள் தான் இச்செயலணியின் தலைவர் என குறிப்பிடுகின்றார்களே தவிர, இந்த நாட்டில் தனி சட்டம் உள்ளதா இல்லையா என எவரும் கருத்து தெரிவிப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து யாரும் பேசுவதில்லை எனவும், பல்வேறு மாகாணங்களிலும், மதங்களிலும் பல்வேறு சட்டங்கள் உள்ளதாகவும், அவ்வாறான தீர்மானங்கள் மாற்றப்பட வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வதாகவும் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தாம் நன்கு அறிந்துள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் ஆரம்பத்திலேயே அதில் உள்ள குறைபாடுகளைக் கூறி பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் முதலில் அதன் திட்டங்களை வகுப்பது முக்கியமானதாகும் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நாட்டில் சிறுபான்மை என்று ஒரு இனம் இல்லை என்றும் அவர் கூறினார்.

நாட்டில் இலங்கையர்கள் என்ற இனம் மாத்திரமே இருப்பதாகவும், இன ரீதியாக யாரையும் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

முழுமையான காணொளிக்கு 👇

https://fb.watch/8-mO1buq9H/

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...