அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச ஆன்மீக அமைப்பின் தலைவர் வரலாற்று சிறப்பு மிக்க அரூசியத்துல் காதிரியா இலங்கை தலைமையகமான அல் மஸ்ஜிதுல் புகாரி தக்யா பள்ளிவாசலுக்கு விஜயம் மேற்கொண்டார்

Date:

வரலாற்று சிறப்பு மிக்க அரூசியத்துல் காதிரியா இலங்கை தலைமையகமான கொழும்பு 10 இல் இருக்கும் அல் மஸ்ஜிதுல் புகாரி தக்யாவில் அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச ஆன்மீக அமைப்பின் ஆன்மீகத் தலைவர் அதி சங்கைக்குரிய அஷ்-ஷெய்க் அப்லலுல் உலமா கலாநிதி தைக்கா அஹ்மத் நாஸிர் ஆலிம் அவர்களுக்கு விசேட வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஆன்மீகத் தலைவர் விசேட உரை நிகழ்த்தினார். பிரதமரின் கிறிஸ்தவ மத இணைப்பாளரான அருட் தந்தை கலாநிதி ஷிஷ்டர் குருகுலசூரிய  அவர்கள், பிரதமரின் இஸ்லாமிய மத விவகார இணைப்பாளரான கலாநிதி ஹசன் மெளலானா அவர்கள் மற்றும் அஹ்மத் ஷா மெளலவி ,அல் ஆலிம் பைசல் காதிரி மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் எஸ்.ஐ காரியவசம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாகிர் மெளலானா மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பிரதி மேயர் எம்.டி எம் இக்பால் , ஏனைய உலமாக்கள்,முரிதீன் ,முஹீதீன்கள் உட்பட பல பிரமுகர்களும் ,சுப்ரின் கவுன்சில் ஒப் சூபி தரீக்காவினுடைய தலைவர் உட்பட ஏனைய அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.ஊர் மக்கள் இன மத பேதமின்றி இமாமுல் அரூஸ் மாவத்தையில் ஒன்று சேர்ந்து ஆன்மீக தலைவர் அவர்களை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

ஆன்மீக தலைவரின் விஜயத்திற்கான உத்தியோகபூர்வ ஊடக அனுசரணையை Newsnow ஊடகப் பிரிவு வழங்குகிறது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...