முழுமையாக தடுப்பூசியை செலுத்தியவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அவுஸ்திரேலியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச பயணத்தை மீண்டும் ஆரம்பிக்குமுகமாகவும், பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காகவும், தற்போது விதிக்கப்பட்டுள்ள கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.இதன்படி , அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவர்கள் ,விசா வைத்திருப்பவர்கள், வர்த்தகர்கள் மற்றும் அகதிகள் ஆகியோர் அவுஸ்திரேலியாவிற்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் அவுஸ்திரேலியாவின் எல்லை மூடப்பட்டது.எனினும் நிரந்தர குடியிருப்பாளர்கள் உட்பட குறைந்த எண்ணிக்கையிலான குழுவினருக்கு மட்டுமே அந்த நாட்டினுள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.