ஆப்கானிஸ்தானின் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.நா.சபை கண்டனம்!

Date:

ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

நேற்று (02) காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 25 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹாக், 400 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மீது மனித வெடிகுண்டாக சென்ற நபர், ஆயுதமேந்தியவர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.

இந் நிலையில், ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்கள், வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மருத்துவமனைக்கு வெளியே வெடிக்கச்செய்ததில் பலர் உயிரிழந்ததாக தாலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவமனைகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும் என ஐ.நா சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...