இந்தோனேஷியா தூதரகத்தின் ஏற்பாட்டில் கலாச்சார பரிமாற்ற நிகழ்வு இன்று நடைபெற்றது!

Date:

இந்தோனேஷியா தூதரகத்தின் ஏற்பாட்டில் கலாச்சார பரிமாற்ற நிகழ்வு ஒன்று இன்று ( 21) கிண்ணியாவில் நடைபெற்றது.

இந்தோனேசியாவின் புகழ்பெற்ற நடனம் மற்றும் பாரம்பரிய இசைக் கருவியான மூங்கிலால் ஆன இசைக்கருவியை இசைத்தல் போன்ற நிகழ்வுடன் இலங்கை திருகோண்ணாமலை கிண்ணியா பிரதேசத்தில் பாரம்பரிய இசைக் கருவிகளைக் கொண்டு பாடல்கள், மற்றும் தகரா பாவா பாடல்கள் சீனடி விளையாட்டு என்பனவற்றை இரு நாடுகளுக்கான கலாச்சார நிகழ்வாக பகிர்ந்து கொண்டன.

இந்தோனேஷியா நாட்டுக்கான முன்னாள் தூதுவர் ஏ எல் எம் லாபிர் தலைமையில் கிண்ணியா விஷன் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.நிகழ்வில் மூங்கில் ஆன இசை எழுப்பும் கருவிகள் யுனெஸ்கோ நிறுவனத்தினால் இந் நாட்டிற்கான பாரம்பரிய இசை என்ற அங்கீகாரத்தை பெற்ற மூங்கிலால் ஆன இசைக்கருவியை இசைத்து காட்டினர்.

மேலும் இந்தோனேசியா நாட்டின் பிரபல நடனங்களும் ஆடி காட்டப்பட்டன இந் நிகழ்வில் பேராசிரியர்கள் புத்திஜீவிகள் கலை இலக்கியவாதிகள் மற்றும் வைத்திய நிபுணர்கள் உட்பட பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர் இந் நிகழ்வில் இந்தோனேசிய நாட்டின் பிரதி தூதுவர் உம் கலாச்சார நிகழ்வின் பிரதம உத்தியோகத்தரும் ஆன ஹிரோ பிரே இட் நோ பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் இந்நிகழ்வில் நினைவுச் சின்னங்களும் பரஸ்பரமாக பரிமாறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...