கொவிட் தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த சகல பாடசாலைகளையும் மீள ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்துக்கமைய இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை (08) ஆரம்பமாகவுள்ளன.
அதற்கமைய தரம் 10, 11, 12 மற்றும் 13 தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டுதல்களை உரிய முறையில் பின்பற்றுமாறு பெற்றோர்களும் , மாணவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு தற்போது ஆரம்ப பிரிவுகளைக் கொண்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.சுகாதார சிபாரிசு கிடைத்தவுடன் தரம் 1-9 வரையான வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.