இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளை ஆரம்பம்!

Date:

கொவிட் தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த சகல பாடசாலைகளையும் மீள ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்துக்கமைய இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை (08) ஆரம்பமாகவுள்ளன.

அதற்கமைய தரம் 10, 11, 12 மற்றும் 13 தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டுதல்களை உரிய முறையில் பின்பற்றுமாறு பெற்றோர்களும் , மாணவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு தற்போது ஆரம்ப பிரிவுகளைக் கொண்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.சுகாதார சிபாரிசு கிடைத்தவுடன் தரம் 1-9 வரையான வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...