நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை, காலி மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மலையக பகுதிகளில் மண்சரிவு, மண்மேடுகள் சரிந்து விழுதல் போன்ற அனர்த்தங்கள் இடம்பெறுவதற்கான அறிகுறிகள் இருந்தால் உரிய பகுதியை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.பொலிசாரும், முப்படையினரும் , மாவட்ட பிரதேச செயலகங்களும் அனர்த்த முகாமைத்துவத்திற்கு உதவுவதற்கு தயாராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.