ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியை முற்றாக நிராகரிப்பதாக சிறுபான்மை கட்சிகள் அறிவிப்பு!

Date:

” ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயல்பாட்டை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டிருக்கும் செயலணி நாட்டில் ஒற்றுமையின்மையையையும் , பிரிவினையையும் ஏற்படுத்தி பாரிய ஆபத்தை கொண்டிருப்பதாகவும் எனவே இதனால் தாங்கள் முற்றாக எதிர்ப்பதாக சிறுபான்மை கட்சிகள் தெரிவித்துள்ளார்கள்.

தமிழ் பேசும் சிறுபான்மை கட்சித் தலைவர்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (2) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் சில எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, தமிழ் பேசும் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக உள்ள அரசியல் தீர்வு என்பது அவர்களின் அரசியல் அபிலாஷைகளைத் திருப்திபடுத்தக்கூடிய முறையிலேயே அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதேவேளையில் எமது மக்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு பின்வரும் தீர்மானங்களை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு நாம் முன்வைக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந் நாட்டின் அரசியல் சாசனத்தில் அமைந்திருக்கும் 13 வது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் . அத்துடன் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட வேண்டும்.பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...