களுத்துறையின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்!

Date:

களுத்துறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் நீர்வெட்டு இடம்பெறுமென நீர் வழங்கல்  வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.அதற்கமைய, நாளை மறுதினம் (25) காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையில் 10 மணிநேர நீர்வெட்டு இடம்பெறுமென நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை  அறிவித்துள்ளது.

அதற்கமைய வாதுவ, வஸ்கடுவ,பொம்புவல, மக்கொன, பேருவளை, தர்கா நகர்,பொதுப்பிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, பெந்தொட்ட, பயாகல, அழுத்கம, பெலவத்த, களுவமோதர மற்றும் மொரகல்ல ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்த ஒன்றிணைந்த நீர் விநியோக வேலைத்திட்டத்தின் அத்தியாவசிய திருத்த பணிகளின் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார்: ஈரான் தூதுவர்!

இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான்...

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...