களுத்துறையின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்!

Date:

களுத்துறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் நீர்வெட்டு இடம்பெறுமென நீர் வழங்கல்  வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.அதற்கமைய, நாளை மறுதினம் (25) காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையில் 10 மணிநேர நீர்வெட்டு இடம்பெறுமென நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை  அறிவித்துள்ளது.

அதற்கமைய வாதுவ, வஸ்கடுவ,பொம்புவல, மக்கொன, பேருவளை, தர்கா நகர்,பொதுப்பிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, பெந்தொட்ட, பயாகல, அழுத்கம, பெலவத்த, களுவமோதர மற்றும் மொரகல்ல ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்த ஒன்றிணைந்த நீர் விநியோக வேலைத்திட்டத்தின் அத்தியாவசிய திருத்த பணிகளின் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...