நாளை மற்றும் நாளை மறு தினம் முழு நாடும் இருளில் மூழ்கும் என அண்மையில் அறிவித்திருந்த மின்சார சேவையாளர்கள் சங்கத்தினர் , பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பான தமது இறுதி தீர்மானத்தை இலங்கை மின்சார சேவையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரன்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ( 01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மின் துண்டிப்பை மேற்கொள்வது தொழிற்சங்க நடவடிக்கையில் மேற்கொள்ளப்படுவதாகவும் எவ்வாறாயினும் தங்களது தொழிற்சங்கத்தினர் இல்லாவிட்டால் மின்சார விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியாதென இலங்கை மின்சார சேவையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்சரித்துள்ளார்.