நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோய்; 1500க்கும் அதிகமான நோயாளர்கள் அடையாளம்!

Date:

நாட்டில் டெங்கு நோய் மிக வேகமாக பரவி வருகிறது.இதுவரையில் 15,874 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இதன்படி மேல் மாகாணத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் இது 47.4% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் 31,162 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கைகள் காட்டுகின்றது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக டெங்கு நுளம்பு உருவாகாத வகையில் வீடுகளின் சுற்றுச்சூழல்களை சுத்தமாக வைத்திருக்குமாறு தொற்று நோய் தடுப்பு பிரிவு பொதுமக்களை கோரியுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...