நாட்டில் வெள்ள அபாயம் | கடலுக்குச் செல்ல வேண்டாம் யாழ் மாவட்ட மக்களிடம் கோரிக்கை

Date:

நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை மற்றும் குடா கங்கையின் தாழ்வு நிலப்பகுதிகளில் எதிர்வரும் சில மணித்தியாளங்களில் சிறிய அளவில் வௌ்ள நிலமை ஏற்படலாம் என நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதனடிப்படையில் புளத்சிங்கள, பதுரலிய, பாலிந்தநுவர, மில்லனிய, ஹொரண, தொடங்கொட மற்றும் களுத்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பகுதிகள் ஊடாக பயணிக்கும் வாகன ஓட்டுனர்களும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலுக்குச் செல்ல வேண்டாம் | யாழ்.மாவட்டச் செயலர் கோரிக்கை

எதிர்வரும் 24 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை ஏற்படலாம் என்றும் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண மாவட்டத்திலே வடகிழக்கு பருவப் பெயர்ச்சி காலநிலை ஆரம்பித்துள்ளது. அந்த வகையிலே யாழ்ப்பாண மாவட்டத்திலே மழை பெய்து வருகின்றது. நேற்று முன்தினம் 6ஆம் திகதி 33.5 சதவீத மழை தான் யாழ்ப்பாண மாவட்டத்திலே பெய்துள்ளது.
இருந்த போதிலும் ஏனைய மாவட்டங்களிலே இந்த மழைவீழ்ச்சி சற்று அதிகமாக இருந்ததுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.யாழில் அவ்வாறான வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலைமை இன்னும் ஏற்படவில்லை.
இருந்தபோதும் எதிர்வரும் 24 மணிநேரத்திற்குள், இலங்கையின் தென்கிழக்குப் பக்கத்திலே ஏற்பட்டிருக்கின்ற தாழமுக்க நிலையானது மேலும் வலுப்பெற்று நகரும்போது யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் அந்த மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடிய சாத்தியமுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எமக்கு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையிலே கடல் சீற்றம் சற்று அதிகமாக இருக்கக்கூடிய நிலை உள்ளது. ஆகவே கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் எனக் கூறுகின்றோம் – என்றார்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...