பார்படாஸ் தீவு குடியரசு நாடாக மலர்ந்தது!

Date:

கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள பார்படாஸ், குடியரசு நாடாக மலர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் 400 ஆண்டுகள், இங்கிலாந்தின் ஆளுகையில் இருந்த இந்த குட்டித் தீவு, 1966-ல் சுதந்திரம் பெற்றாலும், எலிசபெத் ராணியே அந்நாட்டின் தலைவராக நீடித்தார். அந்த முறையை மாற்றி, பார்படாஸ் சுதந்திர குடியரசாக மாறுவதாக, நாட்டின் முதல் அதிபரான சாண்ட்ரா மேசன் அறிவித்தார். தலைநகர் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற இதற்கான விழா, பார்படாஸ் நாட்டின் பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன், உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது.

இந் நிகழ்ச்சியில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பார்படாஸ் நாட்டின் அரசியல் சட்டம் மாறினாலும், இரு நாடுகள் இடையே நட்புறவு தொடரும், குறிப்பிட்டார். 54 நாடுகளை கொண்ட காமன்வெல்த் அமைப்பின் உறுப்பினராகவும் பார்படாஸ் தொடரும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2021/11/29/barbados-set-to-become-a-republic-ditching-british-queen&ved=2ahUKEwim6vW7ysD0AhUaSmwGHdtpBiAQFnoECEMQAQ&usg=AOvVaw2Qr1Dq1XMzR7f6QIwcDkNa&ampcf=1

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...