புத்தளம் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

Date:

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரையில் 22,217 குடும்பங்களைச் சேர்ந்த 78614 பேர் பாதிக்கப்பட்டு, 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காணாமல் போயுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் கே.ஜி விஜேசிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ள அதேநேரம் தற்காலிக முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.21 தற்காலிக முகாம்களில் 1637 குடும்பங்களைச் சேர்ந்த 5234 பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பிரதேச செயலகங்களூடாக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை , குறித்த வெள்ள அனர்த்தத்தினால் புத்தளம் மாவட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணமல் போயுள்ளனர்.காணாமல் போன இருவரையும் மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்க வருகின்றன.கடந்த திங்கட்கிழமை பெய்த அடை மழையினால் ஏற்பட்ட பாரிய வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து வீதிகளை புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க முப்படையினர் களத்தில் இறங்கி வாகன நெரிசலை நேற்று (09) காலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதேவேளை தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தப்போவ, தெதுரு ஓயா,ராஜாங்கனை மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...