28 ஆம் திகதி முதல் அறநெறி பாடசாலைகளை திறக்க ஆலோசனை

Date:

நாட்டில் கொவிட் 19 வைரஸின் ஆதிக்கம் குறைவடைந்துள்ள நிலையில் இம்மாதம் 28 ஆம் திகதி முதல் அனைத்து பௌத்த அறநெறி பாடசாலைகளும் திறக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளுடன் கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, பாடசாலைகளின் 6,7,8 மற்றும் 9 தரங்களுக்காக கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது

Popular

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல்

ஜெனீவாவில் நடைபெற்ற ஈரான் - அமெரிக்கா இடையிலான அணுசக்திப் பேச்சுவார்த்தைகள் எவ்வித...

நாட்டை வந்தடைந்த லாஃப்ஸ் எரிவாயு கப்பல்

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல்...

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடித் தாக்குதல் – தெஹ்ரானில் அதிரும் குண்டுவெடிப்புகள்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று ஈரான்...

வரலாற்றுச் சிறப்புமிக்க அங்காரா மஸ்ஜிதில் ஜும்ஆ உரை நிகழ்த்திய இலங்கை மாணவர்!

இலங்கையைச் சேர்ந்த மாணவர் Fathhy Yakan Nagoor Gafoordeen துருக்கியின் தலைநகர்...