ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12 இன்” 33 வது போட்டியாக இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.இப் போட்டி ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 2010 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ரோகித் சர்மா 74(47), கே.எல் ராகுல் 69(48) ,ஹார்திக் பாண்டியா 35(13) ,ரிசப் பான்ட் 27(13) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் குல்பதீன் மற்றும் கரீம் ஜன்னத் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
211 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக கரீம் ஜன்னத் 42(22), முஹம்மத் நபி 35( 32) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில் முஹம்மத் சமி 3 (32) , அஸ்வின் 2(14) விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
சூப்பர் 12 இல் மூன்று போட்டிகளில் விளையாடிய இந்தியா இரண்டு போட்டிகளில் படு தோல்வியடைந்தது.இவ் வெற்றியோடு முதலாவது வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது.எனினும் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு பெருமளவில் இந்தியாவுக்கு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.