T20 Updates: ” சூப்பர் 12″ இன் மேலும் இரண்டு போட்டிகள் இன்று!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 40 மற்றும் 41 வது போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளது.

இன்றைய நாளுக்கான முதலாவது போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.இப் போட்டி ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் இலங்கை,இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 இற்கு ஆரம்பமாகும்.இப் போட்டி மூன்று அணிகளுக்கு முக்கியமாக அமைந்துள்ளது.அதாவது இப் போட்டியில் ஆப்கானிடம் நியூசிலாந்து தோல்வியடையும் சந்தர்ப்பத்தில் இந்தியாவுக்கான அரையிறுதி வாய்ப்பு அதிகரிக்கும் அத்தோடு ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெறும்.மாறாக நியூசிலாந்து வெற்றி அடையும் பட்சத்தில் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும்.எது எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைய வேண்டும் என இந்திய இரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

இன்றைய நாளின் இரண்டாவது போட்டியாக பாகிஸ்தான் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதவுள்ளன.இன்றைய போட்டி ஷார்ஜாஹ் மைதானத்தில் இலங்கை,இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.இப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி அடையும் பட்சத்தில் அட்டவணையில் 10 புள்ளிகளை பெறுவதோடு ,“சூப்பர் 12 “ தொடரில் அனைத்து போட்டிகளையும் வென்ற அணியாக திகழ்வார்கள்.பாகிஸ்தான் அணி அரையிறுதியில் அவுஸ்திரேலியா அணியை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...