அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச ஆன்மீக அமைப்பின் தலைவர் வரலாற்று சிறப்பு மிக்க அரூசியத்துல் காதிரியா இலங்கை தலைமையகமான அல் மஸ்ஜிதுல் புகாரி தக்யா பள்ளிவாசலுக்கு விஜயம் மேற்கொண்டார்

Date:

வரலாற்று சிறப்பு மிக்க அரூசியத்துல் காதிரியா இலங்கை தலைமையகமான கொழும்பு 10 இல் இருக்கும் அல் மஸ்ஜிதுல் புகாரி தக்யாவில் அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச ஆன்மீக அமைப்பின் ஆன்மீகத் தலைவர் அதி சங்கைக்குரிய அஷ்-ஷெய்க் அப்லலுல் உலமா கலாநிதி தைக்கா அஹ்மத் நாஸிர் ஆலிம் அவர்களுக்கு விசேட வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஆன்மீகத் தலைவர் விசேட உரை நிகழ்த்தினார். பிரதமரின் கிறிஸ்தவ மத இணைப்பாளரான அருட் தந்தை கலாநிதி ஷிஷ்டர் குருகுலசூரிய  அவர்கள், பிரதமரின் இஸ்லாமிய மத விவகார இணைப்பாளரான கலாநிதி ஹசன் மெளலானா அவர்கள் மற்றும் அஹ்மத் ஷா மெளலவி ,அல் ஆலிம் பைசல் காதிரி மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் எஸ்.ஐ காரியவசம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாகிர் மெளலானா மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பிரதி மேயர் எம்.டி எம் இக்பால் , ஏனைய உலமாக்கள்,முரிதீன் ,முஹீதீன்கள் உட்பட பல பிரமுகர்களும் ,சுப்ரின் கவுன்சில் ஒப் சூபி தரீக்காவினுடைய தலைவர் உட்பட ஏனைய அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.ஊர் மக்கள் இன மத பேதமின்றி இமாமுல் அரூஸ் மாவத்தையில் ஒன்று சேர்ந்து ஆன்மீக தலைவர் அவர்களை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

ஆன்மீக தலைவரின் விஜயத்திற்கான உத்தியோகபூர்வ ஊடக அனுசரணையை Newsnow ஊடகப் பிரிவு வழங்குகிறது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...