ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு!

Date:

ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டு. பலர் காயமடைந்தனர்.

நங்கர்ஹாரில் உள்ள பள்ளிவாசலில் நேற்று (12) வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். உடனடியாக காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இம் மாத தொடக்கத்தில் ஆப்கான் தலைநகர் காபூலிலுள்ள ராணுவ மருத்துவமனையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...