சியாரா லியோனில் எண்ணெய் தாங்கி வெடித்து 92 பேர் பலி!

Date:

சியாரா லியோனில் எண்ணெய் தாங்கி வெடித்ததில் 92 பேர் உயிரிழந்துள்ளனர்.100 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஆபிரிக்க கண்டத்தில் உள்ள சியாரா லியோன் தலைநகரான ப்ரீடவுனில் எண்ணெய் தாங்கி ஒன்று மற்றொரு வாகனம் மீது மோதியதை தொடர்ந்து வெடித்தது.

இதில் 92 பேர் உயிரிழந்துள்ளதோடு 100 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசு உறுதி செய்யவில்லை.அதேநேரத்தில் 91 சடலங்கள் வந்துள்ளதாக பிணவறை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.எண்ணெய் தாங்கி மோதியதை தொடர்ந்து அதிலிருந்து கசிந்த எரிபொருளை சேகரிக்க மக்கள் கூடிய போது அப்போது எண்ணெய் தாங்கி வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தாங்கி வெடித்ததால் அருகில் இருந்த கடைகள் மற்றும் கட்டடங்களில் தீ பரவி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

காயமடைந்தவர்கள்அந் நகரில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...