சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியொன்றில் இலங்கை கால்பந்து அணி இறுதிப் போட்டிக்கு வந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இலங்கை கால்பந்து அணி கடைசியாக 2006ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியிலேயே இத்தகைய திறமையை வெளிப்படுத்தியது.
சர்வதேச தரவரிசையில் இலங்கை கால்பந்தாட்ட அணி 204வது இடத்திலும், சீஷெல்ஸ் அணி 199வது இடத்திலும் உள்ளது.இன்றைய போட்டியில் இலங்கை கால்பந்தாட்ட அணி வெற்றி பெற்றால், 25 வருடங்களின் பின்னர் சர்வதேசப் போட்டியொன்றை வெல்வது இதுவே முதல் தடவையாகும். இலங்கை கால்பந்து அணி கடைசியாக 1995 ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றது.அந்த ஆண்டு இலங்கை நடத்திய தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இலங்கை வென்ற கடைசி சர்வதேச கால்பந்து சாம்பியன்ஷிப் ஆகும்.
இன்றைய இறுதிப் போட்டியில் பிரதம அதிதிகளாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் கியானி இன்பான்டினோ ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.