இலங்கையின் சுழலில் சுருண்டது மே.தீவுகள்!

Date:

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் இடம்பெற்றது.இப் போட்டியில் இலங்கை அணி 187 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 386 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 191 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.இதனையடுத்து 348 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இன்றைய ஐந்தாம் நாள் ஆட்ட முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னனியில் இருக்கிறது.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...