மூத்த அரசியல் ஆய்வாளரும், நூலாசிரியரும், பன்முக ஆளுமையாளருமான  ஏ.ஜே.எம்.நிழாம் காலமானார்

Date:

மூத்த அரசியல் ஆய்வாளரும், நூலாசிரியரும், பன்முக ஆளுமையாளருமான  ஏ.ஜே.எம்.நிழாம் நாம்புலுவ பஸ்யாலையில்  காலமானார்.

கொழும்பு, புதுக்கடையை பிறப்பிடமாகக்கொண்ட அவர் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினர் என்பதுடன் 1988 ஆம் ஆண்டு இடம்பெற்ற மேல் மாகாண சபை தேர்தலில் அக்கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

1990 ஆம் ஆண்டு “முஸ்லிம் காங்கிரஸ் ஆக்கமா? அழிவா?” என்ற தன்னுடைய முதலாவது நூலை எழுதி வெளியிட்டு அதன் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் இடம் பாராட்டுதல்களையும் பெற்றுக்கொண்டார்.

இது தவிர, அவர் தேசிய பத்திரிகைகளில் நூற்றுக்கணக்கான அரசியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (15) மாலை 4.00 மணியளவில் நாம்புலுவையில் இடம்பெறும்

மேலும் “தலைசிறந்த  செயற்பாட்டாளரும், நூலாசிரியரும், பன்முக ஆளுமைமிக்கவருமான  ஏ.ஜே.எம். நிலாமின் மறைவு சமூகத்துக்கு பாரிய இழப்பாகும்” என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீரிகம தேர்தல் தொகுதி அமைப்பாளர் எம்.யூ ஆதிக் தெரிவித்துள்ளார்.

 

நன்றி Siyane News

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...