அநுராதபுரத்தில் டெங்கு நோய் தீவிரம்!

Date:

அநுராதபுரத்தில் டெங்கு நோய் தீவிரமாக பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக மாவட்ட தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் தேஜன சோமதிலக்க தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் இறுதி வாரத்தில் மாத்திரம் பத்து டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , அநுராதபுரம் புதிய பஸ் தரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதியில் நேற்று முன்தினம் (01) மேலும் மூன்று டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.இதனையடுத்து நகரின் புதிய பஸ்தரிப்பு நிலையம் உள்ளிட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளின் போது டெங்கு நுளம்பு உருவாகக் கூடிய குடம்பிகள் அதிகமான இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மழையுடனான காலநிலை காணப்படுவதால் இந் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் , எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இந்த நிலைமை மாவட்டத்தின் ஏனைய இடங்களுக்கு பரவக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாக அநுராதபுரம் மாவட்ட தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் தேஜன சோமதிலக்க தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகி வரும் பாகிஸ்தான்!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை முடக்கியுள்ள மேற்கு ஆசியப் போரை முடிவுக்குக் கொண்டுவர...

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR நடைமுறை

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென...

12 வயது சிறுவர்களுக்கு ஆயுள் தண்டனை:எல் சால்வடார் அரசு

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 12 வயது சிறுவர்களுக்கும் ஆயுள் தண்டனை...

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, எரிசக்தி அமைச்சர் குமார...