அரச விருது பெற்றார் மனித நேயன் இர்ஷாத் ஏ காதர்! 

Date:

சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான அரச தேசிய விருதினை நேத்ரா தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் மனித நேயன் இர்ஷாத் ஏ.காதர் பெற்றுக் கொண்டார்.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச தொலைக்காட்சி ஆலோசனைக்குழுவின் ஏற்பாட்டில் 15ஆவது வருடமாக இடம்பெற்ற 2020ஆம் ஆண்டுக்கான தொலைக்காட்சி கலை விருது வழங்கும் விழா கடந்த 29ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் இடம் பெற்றது.

இதில் தொலைக்காட்சியில் சிறந்த தமிழ் செய்தி வாசிப்பாளருக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான அரச தேசிய விருதினை நேத்ரா தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் மனித நேயன் இர்ஷாத் ஏ.காதர் பெற்றார்.

2019 ஆம் ஆண்டில் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மதிப்பீடு செய்யப்பட்ட வேளை, தொலைக்காட்சியில் சிறப்பாக செய்திகளை முன்வைத்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூரல்

ஈஸ்டர் ஞயிறு குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில்...

நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகலில் மழைக்கு சாத்தியம்: 7 மாகாணங்களில் எச்சரிக்கை மட்டத்தில் உஷ்ணம்

இன்றையதினம் (17) நாட்டின் மேல், சப்ரகமுவ, ஊவா, தென் மாகாணங்களிலும் கண்டி,...

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் நாளை மூடல்

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு...