“ஈழத்து நூன்” எம்.ஏ.எம்.நிலாம் எழுதிய ‘தட்டு தாவாரம்’ கவிதை நூல் அறிமுக விழா இன்று மாலை கொழும்பில்!

Date:

பவள விழா நாயகன் பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர், “ஈழத்து நூன்” எம்.ஏ.எம்.நிலாம் எழுதிய ‘தட்டு தாவாரம்’ கவிதை நூல் அறிமுக விழா இன்று புதன்கிழமை (08) பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு – 2, முஸ்லிம் காங்கிரஸ் தலைமையக தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவி கலாபூஷணம் புர்கான் பீ. இப்திகார் (எம்.ஏ.) தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், பிரதம அதிதியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் “முனீருள் மில்லத்” பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் கலந்து கொள்வதோடு, நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மல்லியப்பூ சந்தி திலகர், கல்லொழுவை அல் – அமான் முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எம்.ரி.எம்.ஆஸிம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.
நூலின் முதல் பிரதியை தொழிலதிபர் முஸ்லிம் சலாஹுதீன் பெற்றுக் கொள்வதோடு,  டாக்டர் மௌலவி ஜலீல் சுல்தான் (மன்பஈ) திருச்சி மாவட்ட அரசு டவுன், டாக்டர் வி.எஸ்.ஏ. ஷேக் முகமது சுஹைல் (தலைவர், செயலாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி – திருச்சி), திருச்சி டாக்டர் எம்.கே. ஷாஹுல்ஹமீது (ஊடகவியலாளர் –  மணிச்சுடர், மக்கள்குரல்) எழுத்தாளர்களான கே.ஜே.உமர்கயான், பழனி சஹான் ஆகியோர் அழைப்பதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் கல்விமான்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

பெரும்பாலான இடங்களில் பி.ப. 1.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (18) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, தென் மாகாணங்களில்...

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால்...

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்...