சவூதி அரேபியாவில் நாத்திகவாதத்தை ஊக்குவித்த ஏமன் நாட்டவருக்கு 15 ஆண்டுகள் சிறை!

Date:

சவூதி அரேபியாவில் நாத்திகவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்து பதிவிட்ட நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏமன் நாட்டைச் சேர்ந்த அலி அபு இரண்டு ட்விட்டர் கணக்கில் மத நம்பிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.நவீனமயமாக்கலை நோக்கிச் செல்லும் சவூதி அரேபியா மக்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளில் தலையிடுவதை நிறுத்துமாறும் , இறைவன் நிந்தனையை குற்றமற்றதாக அறிவிக்குமாறும் வலியுறுத்தி வந்தார்.டுவிட்டர் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை வைத்து காவல்துறை அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்தனர்.நாத்திகம் மற்றும் கடவுள் மறுப்பு கொள்கைகளை அலி அபு பரப்பியதாக குற்றம் சாட்டிய நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Popular

More like this
Related

AI Impact Summit 2026-ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்தியா பயணம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், ‘AI Impact Summit...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று...

அடுத்த சில நாட்களுக்கு மழை பொழிவு அதிகரிக்கும்

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா...

நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள்...