“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் சமுர்த்தி பயனாளிகளுக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டம்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சமுர்த்தி திணைக்களம் மூலம் செயற்படுத்தப்பட்டு வரும் சமுர்த்தி வாழ்வாதார உதவி வழங்கி வைக்கும் வேலைத் திட்டத்தின் மூன்றாவது கட்டம் நேற்று முன்தினம் (06) மீரிகமை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளுக்கு சுய தொழில் ஒன்றை செய்வதற்காக தையல் இயந்திரங்கள், இலத்திரனியல் தராசுகள் உட்பட பல உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன, மீரிகமை பிரதேச சபை தவிசாளர் சனத் நந்தசிறி உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள், மீரிகமை பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

(ரிஹ்மி ஹக்கீம்)

 

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...