ட்விட்டரின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளி பராக் அகர்வால் நியமனம்!

Date:

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ஜேக் டோர்சி பதவி விலகியுள்ள நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை ஐ.ஐ.டியில் படித்த அகர்வால், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். 2011ல் ட்விட்டர் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த அவருக்கு, தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில், பராக் அகர்வால் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதாக ட்விட்டர் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனிடையே, பதவியை ராஜினாமா செய்துள்ள டோர்சி, அகர்வாலை ட்விட்டர் தலைமைப் பொறுப்புக்குத் தேர்வு செய்திருப்பது சிறந்த முடிவு என்று பாராட்டியுள்ளார். அந் நிறுவனத்தை விட்டு டோர்சி வெளியேற முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.tribuneindia.com/news/business/indian-origin-executive-parag-agrawal-is-new-ceo-of-twitter-after-jack-dorsey-steps-down-344284&ved=2ahukewicql703cd0ahvzugwghrstb3sqfnoecgiqaq&usg=aovvaw074mi7mtf_0klf47ugqx34&ampcf=

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...