துருக்கியில் மணிக்கு 129 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளி; இதுவரை 4 பேர் பலி!

Date:

துருக்கியின்  இஸ்தான்புல் நகரில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக கடல்கா மாவட்டத்தில் மணிக்கு 129 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றில், பிரம்மாண்ட மணிக்கூண்டு ஒன்று இடிந்து விழுந்ததாகவும் மணிக்கூண்டு அருகே யாரும் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது. புயலில் வணிக வளாகம் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5க்கும் மேற்பட்ட கார்கள் முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் சுமார் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதோடு 4 பேர் பலியானார்கள்.

அதேசமயம் மற்றொரு இடத்தில் சாலையோரம் இருந்த தகரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. புயலின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் லாரி ஒன்று கவிழ்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுமையான சூறாவளியால் இதுவரையில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே மத்திய கடற்பகுதி மற்றும் கருங்கடல் பகுதியில் படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணொளி இணைப்பு

https://www.instagram.com/reel/CW5TL4Spc_p/?utm_medium=copy_link

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...