பதுளை சிறைச்சாலையில் முஸ்லிம் கைதிகள் மீது தாக்குதல் | மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Date:

கடந்த காலங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பதுளை சிறைச்சாலையின் விசேட சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் சந்தேக நபர்கள்மீது சக கைதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு உணவைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நின்றவர்கள்மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த நால்வர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர்களில் மூவர் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாகவும் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிர்ந்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சுமார் 9பேர் பதுளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் சந்தேக நபர்களுக்கு உயிரச்சுறுத்தல் உள்ளதாகவும் உடனடியாக இவர்களை வேறு பாதுகாப் பான சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் அவர்களது குடும்பத்தினரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்கள் எனக் கூறியே இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தடிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலால் ஒருவரின் தாடை எலும்புகள் மற்றும் பல் என்பன சேதமடைந்துள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சிறைர்சாலைகள் திணைக்களம் மற்றும் பதுளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வீரகேசரி

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...