பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சூறாவளியால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 375 ஆக உயர்வு!

Date:

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சூறாவளியால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 375 ஆக அதிகரித்துள்ளது.

பிலிப்பைன்ஸில் ‘ராய்’ எனப் பெயரிடப்பட்ட சூறாவளி கடந்த வியாழக்கிழமை தாக்கியுள்ளது. இதில் தினாகட் உள்ளிட்ட மாகாணங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. ஏராளமான மரங்கள் விழுந்து வீடுகள் சேதமடைந்தன.சூறாவளியில் உயிரிழந்தோா் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 146 ஆக இருந்த நிலையில், 375 ஆக திங்கட்கிழமை அதிகரித்தது. 500 போ் காயமடைந்துள்ளனா். மாயமான 56 பேரை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

சூறாவளியின் பாதிப்பால் பல நகரங்கள், கிராமங்களை அணுக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

புதிய கல்விச் சபைக்கான பரிந்துரைகள் முன்மொழிவு: பொதுமக்களின் கருத்துகளுக்கு அழைப்பு!

இலங்கையின் ஒட்டுமொத்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,  பிரதமரும் கல்வி, உயர்கல்வி...

அரபு நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு: மத்திய கிழக்கில் அமைதி நிலவ இலங்கை ஆதரவு!

இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர் பேரவையின்  உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

ஜும்ஆ பிரசங்கங்களில் நடுநிலையையும், சமூகப் பொறுப்பையும் கடைப்பிடியுங்கள்; முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் புதிய வழிகாட்டல்.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் ஜும்ஆ பிரசங்கங்களின் போது,  சர்வதேச விவகாரங்கள்...

தேசிய அடையாள அட்டை பெறுவோருக்கு அறிவிப்பு!

தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவையானது, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும்...