புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்துக்கும் அமைச்சர் திலும் அமுனுகமவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

Date:

இன்று (28) புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் மற்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று  இடம்பெறவுள்ளது.

மேலும், இந்த கலந்துரையாடல்களின் மூலம் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று (27) கொலன்னாவை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எரிபொருள் கொண்டு செல்வது மற்றும் சீமெந்து கொண்டு செல்லும் செயற்பாடுகளிலிருந்து விலகுவதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...