மட்டக்களப்பில் சுகாதார துறையினர் பல கோரிக்கைகளை முன்வைத்து  ஆர்ப்பாட்டம்

Date:

கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர் உத்தியோகத்தர்கள் மற்றும் நிறைவுகான் மருத்துவ உத்தியோகத்தர்கள் துறைசார் நிபுணர்கள் ஒன்றிணைந்து பல கோரிக்கைகளை முன்வைத்து வியாழக்கிழமை (16) மட்டக்களப்பு போதனவைத்தியசாலையில் இருந்து காந்தி பூங்கா வரையில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சுகாதார தொழில் வல்லுனர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டினையடுத்து கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர் உத்தியோகத்தர்கள் மற்றும் நிறைவுகான் மருத்துவ உத்தியோகத்தர்கள் துறைசார் நிபுணர்கள் சுகாதார தொழிற்சங்கங்களின்; தலைவர்கள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சுகயீன விடுமுறையை அறிவித்துவிட்டு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முன்னால்; ஒன்றிணைந்தனர்
இதனையடுத்து ஒன்றினைந்த சுகாதார துறையினர் காலை 10 மணிக்கு அங்கிருந்து ஆர்ப்;பாட்டத்தில் ஈடுபட்டனர் இதன்போது பெற்றுத்தா பெற்றுத்த தரப்படாமல் மறுக்கப்பட்ட எமது உரிமைகளை மீளப் பெற்றுத்தா, போராடு போராடு கோவிட் கொள்ளை றோயால் அரசியல் இலாபம் பார்த்த அரசை எதிர்த்து போராடு, மிதிக்காதே மிதிக்காதே வைத்திய துறைஊழியர்களை மதிக்காவிட்டாலும் மிதிக்காதே , 2006 ஆண்டில் முன்வைக்கப்பட்ட மகிந்த சிந்தனையை பற்றி பரிசீலி, போலி வாக்குறிதிகளை நம்பி ஏமாறாதே,
எங்கள் சேவைக்குரிய உரிமைகளை தந்துவிடு, போலி மருத்துவத்தை கொடுத்து அப்பாவி மக்களை ஏமாற்றாதே, எமது கடமைகளை செய்து மக்களை காப்பாற்ற விழித்திடு, மருத்துவ மாபியா கொள்ளைகiளை நிறுத்து, பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மாஸ் வழங்கு, பொது மக்களை நோய் நொடியில் இருந்து காப்பாற்று, 12 வருடத்தில் முதலாம் தர பதவி உயர்வு வழங்கு, விசேட கடமை கொடுப்பனவை 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கு,
நடைமுறைப்படுத்துமாறும், பறிக்கப்பட்ட பதவிநிலை உத்தியோகத்தர் தகுதியை மீண்டும் வழங்கு ,மேலதிக நேரத்திற்கான நியாயமான அலகு கொடுப்பனவை வழங்கு தாதி உத்தியோகத்தர்கள் தமது பதவி உயர்வு தொடர்பாக அமைச்சரவையில் அனுமதி வழங்கியபோதும் இதுவரை சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆரம்பித்த ஆர்ப்பாட்ட ஊர்வலம்
அங்கிருந்து கோவிந்தன் வீதிவழியாக மட்டக்களப்பு பிரதான பஸ்தரிப்பிநிலையம் சென்று அங்கிருந்து நகர் மணிக்கூட்டுக் கோபுரத்தையடைந்து அங்கிருந்து மட்டு பொலிஸ் நிலைய வீதி சுற்றுவட்டத்தையடைந்து பின்னர் அங்கிருந்து கோட்டமுளை பாலம் ஊடாக காந்தி பூங்காவரை சென்றனர் .

இதன் பின்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதார துறையினர் பிற்பகல் ஒரு மணிக்கு அங்கிருந்து கலைந்து சென்றனர்

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...