முன்னாள் நீதிவான் திலின கமகே விடுதலை!

Date:

சட்டவிரோதமாக யானைக் குட்டியை வைத்திருந்தமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் நீதிவான் திலின கமகே நிரபராதி யாக கருதி கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் கமகேவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் நீதவான் திலின கமகே, சந்திரரத்ன பண்டார யாதவர மற்றும் வனவிலங்கு அதிகாரிகளான உபாலி பத்மசிறி மற்றும் பிரியங்கா சஞ்சீவனி ஆகிய நான்கு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

உரிமம் இல்லாமல் யானைக் குட்டியை வைத்திருந்தது, போலி ஆவணங்களை டெண்டர் செய்ய சதி செய்தது, போலி ஆவணம் தயாரித்து சம்பந்தப்பட்ட யானைக் குட்டியை பதிவு செய்தது உள்ளிட்ட 25 பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் நீதவான் திலின கமகே 2016 ஆம் ஆண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காத்தான்குடியில் ஈச்ச மரமும் கத்தாரில் அரச மரமும்…!

- சஜீர் முஹைதீன் இது வேற எங்கயும் இல்ல கட்டார்தான் இது. ஒரு...

பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்!

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி...

காசாவுக்கான ட்ரம்பின் திட்டத்திற்கு ஐ.நா. ஆதரவு: ஹமாஸ் நிபந்தனைகள் நிராகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா அமைதித் திட்டத்திற்கு ஐ.நா. ஒப்புதல்...

சவூதி பேருந்து விபத்து சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்

சவூதி அரேபியாவின் மதீனாவில் நிகழ்ந்த பேருந்து விபத்து சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர்...