லெபனான் நாட்டில் உள்ள பாலஸ்தீன அகதி முகாமில் வெடிப்பு சம்பவம் ; இதுவரையில் 12 பேர் பலி!

Date:

லெபனான் நாட்டில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமில் இருந்த ஆயுத கிடங்கு வெடித்து சிதறியதால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானில் உள்ள ஒரு சில பாலஸ்தீன முகாம்கள், ஹமாஸ் அல்லது ஃபத்தாஹ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ளன.

துறைமுக நகரான டயரில் உள்ள அகதிகள் முகாமில், டீசல் டேங்கர் லாரி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து அருகில் இருந்த பள்ளிக்கு பரவியது. அந்த பள்ளியை ஹமாஸ் அமைப்பினர் ஆயுத கிடங்காக பயன்படுத்தி வந்ததால், அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இதுவரையில் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கொவிட் தொற்று நோயை கட்டுப்படுத்த சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒக்சிஜன் சிலிண்டர்கள் பற்றியதால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக பலஸ்தீன ஊடகமான ஷெஹாப் செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.aljazeera.com/news/2021/12/10/explosion-south-lebanon-palestinian-camp

Popular

More like this
Related

நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள்...

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஐ.தே.க. அறிக்கை

சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியின் கொலையைக் கண்டித்து ஐக்கிய...

பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு!

பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை (பிப். 17) பதவியேற்கிறாா். பங்களாதேஷ்...

கொழும்பு-புத்தளம் ரயில் பாதை முழுமையாக திறப்பு!

கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் ரயில் சேவைகள் இன்று (16) அதிகாலை முழுமையாக...