ஹெலிகொப்டர் விபத்து தொடர்பில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய பதிவை இட்டதாக கூறி இந்திய இளைஞன் ஒருவர் கைது!

Date:

இந்திய குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்துச் சம்பவம் தொடர்பில் சர்ச்சைக்குரிய பதிவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இராணுவ ஹெலிகொப்டர் விபத்துச் சம்பவம் தொடர்பாக தேவையற்ற யூகங்களையும் , கருத்துக்களையும் பரப்ப வேண்டாம் என இந்திய விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது.அவ்வாறு சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துக்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந் நிலையில் இந்திய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஷிபிந்த் என்ற 24 வயது இளைஞன் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக சைபர் கிரைம் பொலிசாரால் கைது செய்யப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...