இந்திய ஒரு நாள் அணியின் தலைவராக ரோஹித் சர்மா நியமனம்!

Date:

இந்திய ஒருநாள் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இந்திய ஒருநாள் அணியின் புதிய தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, ஜனவரி மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய ஒரு நாள் அணிக்கு ரோஹித் சர்மா தலைவராக பொறுப்பேற்பார் என பிசிசிஐ இன்று (08) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் அஜிங்கியா ரஹானேவுக்குப் பதிலாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் உப தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய ஒருநாள் அணியின் தலைவராக செயற்பட்டு வரும் விராட் கோஹ்லி தலைமையில் 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐசிசி ஒரு நாள் உலகக் கிண்ணங்களை இந்திய அணி கைப்பற்றத் தவறியுள்ளது.இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான விராட் கோஹ்லி, கடந்த மாதம் நிறைவுக்கு வந்த T20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு T20 தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதனையடுத்து இந்திய T20 அணியின் புதிய தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.

இதனிடையே, 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒரு நாள் உலகக் கிண்ணத்துக்கு தயாராகும் வகையிலும், வலுவான இந்திய அணியை உருவாக்கும் முடிவிலும் தற்போது ஒரு நாள் தலைவர் பதவியிலிருந்தும் விராட் கோஹ்லி நீக்கப்பட்டுள்ளார், இதனால் அவருக்குப் பதில் உப தலைவராக இருந்த ரோஹித் சர்மா இந்திய ஒருநாள் அணியின் புதிய தவைராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதில் முன்மாதிரியாகத் திகழும் புத்தளம்.

நேற்று நடைபெற்ற அருட்தந்தை திலங்க அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு! புத்தளம் மாவட்ட சர்வ...

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...