எதிர்வரும் 30 ஆண்டுகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சி திட்டம்- சீனா அரசு முடிவு!

Date:

சீனாவில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியத்துவம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து சீனாவின் முக்கிய நகரங்களில் 5- ஜி தொழில்நுட்ப சேவையை பரவலாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. E-commerce மற்றும் கணினித் துறை சார்ந்த தொழில்களில் முதலீடு அதிகரித்திருப்பதாகவும் , சீனாவில் மக்களிடையே ஒன்லைன் மூலம் பொருட்கள் வழங்குவது கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் , அந் நாட்டு புள்ளியியல் துறை அறிவித்துள்ளது.

இதனையடுத்து, தகவல் தொடர்பு துறையில் முதலீடுகள் கணிசமாக உயரும் என அந் நாட்டு தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் இயக்குனரான ஸீ கன் (Xie cun) தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி சதக்கத்துல்லா மறைவு!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேனாள் அதிகாரியும், பொருளாதார வல்லுநருமான முனைவர்...

இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும்...

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...