எரிவாயு கசிவை கண்டறியும் மணத்தை உருவாக்கும் இரசாயன பதார்த்த பற்றாக்குறையினாலே எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனையை இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
எரிவாயு கசிவை கண்டறியும் மணத்தை உருவாக்கும் எதில் மெகப்டன் (Ethyl Mercaptan), கொள்கலனில் 14 அலகுகளாக இருக்க வேண்டிய நிலையில், அது தற்போது 5 அலகுகளாக உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந் நிலையில், எரிவாயு கொல்கலன் விநியோகத்தை இடைநிறுத்துமாறு லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.