ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் அரச ஊழியர்களின் வார விடுமுறையை மூன்று நாட்களாக உயர்த்தியுள்ளதாக அந் நாட்டு அரசு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.
2022 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இது அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.டுபாயில் வாரத்தில் நான்கரை நாட்கள் வேலை நாட்களாகவும் , வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை நாட்களாக வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.இந் நிலையில் ஷார்ஜா அரசும் இந்த நடைமுறையை அரச ஊழியர்களின் வார விடுமுறை நாட்களை மூன்றாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.இதனால் நாட்டின் வணிகம் மற்றும் பொருளாதார சந்தை வளர்ச்சி அடையும் என அந் நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.