எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (12) முதல் மாதம் இறுதி வரையில் சதொச விற்பனையகங்களில் சில வகையான அரிசிகளை 100 ரூபாவுக்கு குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தக துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சதொச வர்த்தக நிலையங்களில் 50 அத்தியாவசிய பொருட்களை இன்று (12) முதல் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என்று நேற்று (11) ஊடக சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.
நாடு அரிசி 1Kg – 99 ரூபா 50 சதத்திற்கும் , சம்பா அரிசி 1Kg – 130 ரூபாவிற்கு சதொச விற்பனையகங்களில் விற்பனை செய்யப்படுகிறது.எந்த அரிசி வகைகளையும் தலா 5 kg அளவில் பெற்றுக் கொள்ள முடியும்.சீனி 1Kg 125 ரூபாவுக்கும் , பருப்பு 1Kg 240 ரூபாவுக்கும் , நூடில்ஸ் 125 ரூபாவுக்கும் ,சவர்க்காரம் உள்ளிட்ட 50 பொருட்களை சந்தையில் நிலவும் விலையை விடவும் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.