சமையல் எரிவாயு தொடர்பில் நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை!

Date:

சமையல் எரிவாயு தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் லிட்ரோ, லாப் கேஸ் நிறுவனங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று (31) அறிவித்துள்ளன.

சமையல் எரிவாயு வெடிப்புகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி சிவில் சமூக ஆர்வலர் நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தைக்கு வெளியிடப்பட்ட அபாயகரமான எரிவாயு மீளப் பெறுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபையும் எரிவாயு நிறுவனங்களும் தவறிவிட்டதாக அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...