சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையில் தொற்றா நோய் மருத்துவ விழிப்புணர்வு!

Date:

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (G.M.M.S) 35 வயதிற்கு மேற்பட்ட சகல ஆசிரியர்களுக்கும் சாய்ந்தமருது பிரதேச வையத்திய குழாத்தினரால் தொற்றா நோய் தொடர்பான மருத்துவ விழிப்புணர்வும் பரிசோதனையும் பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸின் அழைப்பின்பேரில், அவ் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இதன் பிரதான வளவாளராக பிரதம தாதி உத்தியோகத்தர் பீ.எம். நசுறுத்தீனினால் சமூகத்தில் அதிகரித்துவரும் தொற்றா நோய் தொடர்பாகவும் ஆபத்தான உணவு பழக்கவழக்கங்கள் தொடர்பாகவும் குறிப்பாக பதின்ம வயதினருக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் தொடர்பாகவும் சிறந்த விளக்கவுரையும் அறிவுரையும் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வைத்திய பரிசோதனை முகாமினை சிறப்பாக நடாத்தியமைக்காக பாடசாலை ஆசிரியர் நலன்புரி அமைப்பு மற்றும் பாடசாலை சுகாதாரக் கழகம், வைத்தியருக்கும் அதன் குழுமத்தினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

 

Popular

More like this
Related

காத்தான்குடியில் ஈச்ச மரமும் கத்தாரில் அரச மரமும்…!

- சஜீர் முஹைதீன் இது வேற எங்கயும் இல்ல கட்டார்தான் இது. ஒரு...

பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்!

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி...

காசாவுக்கான ட்ரம்பின் திட்டத்திற்கு ஐ.நா. ஆதரவு: ஹமாஸ் நிபந்தனைகள் நிராகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா அமைதித் திட்டத்திற்கு ஐ.நா. ஒப்புதல்...

சவூதி பேருந்து விபத்து சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்

சவூதி அரேபியாவின் மதீனாவில் நிகழ்ந்த பேருந்து விபத்து சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர்...