சிலி நாட்டின் சான்டியாகோவில் உள்ள சிலியன் புயின் பூங்காவில் விலங்குகளுக்கு பரிசோதனை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக பூங்காவிலுள்ள சிறுத்தை , பியுமா , ஒரங்குட்டான் குரங்கு மற்றும் சிங்கத்திற்கு தடுப்பூசி செலுத்தப்படுள்ளதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள்.விலங்குகளுக்கான மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஸோயடிஸ் ( zoetis) நிறுவனம் வழங்கிய தடுப்பூசி பூங்கா உயிரினங்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் ,சோதனை முடிவில் வெளி வரும் முடிவுகளை அடுத்து மற்ற விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.